பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

46. சுகுதத்தை அடைவாராகவும் இந்த ரணபலி முருகையாவுக்கு நடக்கிற திரு
47. வெத்தியூருக்கு அகிதம் பண்ணினவன் கெங்கையிலேயும் தனுக்கோடி
48. யிலே கோடி பிராம்மணரை வதை பண்ணின தோஷத்தை அடைவாராகவும்.
49. ஸ்ரீ வஸ்தி.
50. ------------------------
51. ------------------------
52. யிந்த தர்மசாசனம் எழுதினேன் ராயசம் தேவ ராய பிள்ளை புத்திரன்
53. சொக்கனாதன் இந்தவிதம் இந்தப்படிக்கு தாம்புரசாசனம் எழுதினேன்.
54. சென்ன வீரபண்டாரம் புத்திரன் சென்ன வீரப்பன் எழுத்து பெருவயலில் திருப்ப.
55. ணி காணியாட்சி மங்களேஸ்வர குருக்கள் கையில் தானஞ் செய்து குடுத்தது.

5. அரளிக் கோட்டை செப்பேடு

மன்னர் சசிவர்ணத்தேவர், தமது பிரதானியாக கிருஷ்ணபிள்ளை தாண்டவராய பிள்ளையை நியமனம் செய்து முத்திரை மோதிரம் வழங்கிய ஆணையைக் கொண்ட பட்டயமிது. கி.பி.1747ல் வழங்கப்பட்டுள்ளது. தாண்டவராய பிள்ளையின் தந்தை காத்தவராய பிள்ளையும் நாலு கோட்டைப் பாளையம் பெரிய உடையாத் தேவரது அட்டவணைக் கணக்கராக இருந்தார் என்ற விவரமும் இந்தச் செப்பேட்டில் இருந்து தெரிய வருகிறது.

(இந்தச் செப்பேடு சிவகங்கை வட்டம் அரளிக்கோட்டை கிராமம் எஸ்.இராமகிருஷ்ணன் என்பவரிடம் உள்ளது.)

1. பிரபவ வருடம் சித்திரை மாதம் 16 தேதி
2. மகாராஜ மானிய அரசு
3. நிலையிட்ட சசிவர்ண பெரிய உ
4. டைய தேவர்களது கிஷ்ணபிள்ளை
5. தாண்டவராய பிள்ளைக்கி
6. பட்டயம் கொடுத்தபடி பட்டய
7. மாவது பாளையப்பட்டு முதல்
8. தன் தகப்பன் காத்தவராய பிள்
9. ளை நம்மிட தகப்பனார் மேற்படி உடை
10. யா தேவர் நாள் முதல்அ
11. ட்டவணை கணக்கும் எழுதி காரு
12. வாரும் பார்த்து வந்தபடியானாலே