பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூலாசிரியர்

முதல்வரிடமிருந்து பரிசு பெறுகிறார் ஆசிரியர்.

மறவர் சீமையின் தலைநகரான இராமநாதபுரத்தில் பிறந்தவர். நாற்பது ஆண்டுகள் தமிழ் நாடு அரசுப் பணியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலை, இலக்கியம், வரலாறு, அகழ்வாய்வு, கல்வெட்டு, செப்பேடு ஆகிய துறைகளில் நல்ல ஆய்வும் அனுபவ முதிர்வும் உடையவர்.

ஆய்வாளர், நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர், தென்னிந்திய வரலாற்றுப் பேரவை (வேலூர்), தென்னிந்திய வரலாற்றுக் காங்கிரஸ், தமிழ்நாடு வரலாற்று காங்கிரஸ் (சென்னை) அனைத்து இந்திய ஆவணக் காப்பாளர் இயக்கம் (புதுடெல்லி) ஊர்ப்பெயர் ஆய்வுக் கழகம் (திருவனந்தபுரம்) தமிழக தொல்லியல் கழகம் (தஞ்சாவூர்) ஆகிய அமைப்புக்களில் ஆயுள் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

மதுரை வட்டார, வரலாற்று ஆவணக் குழுவிற்கு தமிழ்நாடு அரசினால் நியமனம் செய்யப்பெற்று கடந்த ஏழு ஆண்டுகளாக மதுரை மாவட்ட ஆவணக் காப்பகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இதுவரை, இவர் வரைந்து வெளியிட்ட ஏழு நூல்களில் மூன்று நூல்கள் தமிழ்நாடு அரசினரால் சிறந்த நூல்களாக தேர்வு செய்யப்பெற்று 1989, 1991, 1994ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் அரசு விழாவில் முதல் பரிசும், பாராட்டு இதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 1988-ல் சென்னை சீதக்காதி அறக்கட்டளையினர் நடத்திய மாநில அளவிலான நூல் போட்டியில் 'முஸ்லிம்களும் தமிழகமும்' என்ற நூல் பதினாயிரம் ரூபாய் பரிசும் பாராட்டும் பெற்றது.

V