பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 57

9. மூலா துரந்தரன் ராமசாமி காரியா துரந்தரன் தொண்டித்துறை காவலன்
10. செம்பிய நாடன் தேவை நகராதிபன் இரண்ய கெர்ப்பயாசி அசுபதி
11. கெசபதி நரபதி ரெகுனாத சேதுபதி பிறிதிராச்சியம் பரிபாலனம் பண்
12. னியருளாநின்ற கலியுக சகாத்தம் ஸ்ரீ4851 சாலிவாகன சகாத்தம் 13. 1672 இதன்மேல்ச் செல்லாநின்ற பிறமோதுத ஸ்ரீ சித்திரை மாதம் 14. 1உ சுக்கிரவாரம் சதுத்தெசி தினம் ரோகிணி செளபாக்கிய மாதிரையும்
15. கூடின சுபதினத்தில் பாண்டி தேசத்தில் பொதியமா மலையான் வய்கை,ஆத்துடை
16. யான் பாண்டி வளநாட்டில் திருக்கானப்பேர்க் கூத்தத்துப் புனல்ப
17. ரளை நாட்டில் குளந்தை நகராதிபதி முல்லையந் தாரன் பஞ்சகெதி
18. புரவியான் மும்மத யானையான் அன்னக்கொடி கெருடக்கொடி அனுமக்கொடி
19. சிங்கக்கொடி புலிக்கொடி விருதுடையான் மும்முரசு அதிரும்
20. மூன்றிலான் திக்குவேலி ஆணை செலுத்திய சிங்கம் மேனாட்டு
21. ப்புலி தாலிக்குவேலி தளசிங்கம் இளசிங்கம் இரவிகுல
22. சேகரன் பஞ்சகால பயங்கரன் அரச நிலையிட்ட விசைய ரெகு
23. னாத சசிவர்ணப் பெரிய உடையா தேவரவர்கள் புத்திரன் அரசு
24. நிலையிட்ட முத்து வடுகனாதப் பெரிய உடையாத் தேவரவர்கள்
25. சோளதேசத்தில் செல்வத் திருவாரூரில் தியாகராஜ சாமியாருக்கு அ
26. ன்னதானக் கட்டளைக்கு கற்தறான அருணாசலத் தம்பிரான் அவர்கள்
27. பாரிசமாக நம்முட அறக்கட்டளைக்கு குடுத்த கிராமம் பாண்டி தேசத்தி
28. ல் தேர்போகி னாட்டில் னாதன்வயல் பாணவயல் ரெண்டும் எல்கை
29. பாணவயல் திருப்பனங்குடி கம்மாய்க்கு திப்பன் ஏந்தலுக்கு கிழக்கு தா
30. னிக் கம்மாய்க்கு வடக்கு கடப்பங்கு தெக்கு ஏந்தலு தெக்கு னாதன்
31. வயலுக்கு இச்சியடி ஊறணிக்கு தெக்கு ஊத்தன் புஞ்சைக்கு வட
32. டக்கு புங்கானி காட்டுக்கு மேற்க்கு புதுப்பட்டி தாண்டவன் செ
33. ட்டி கொல்லைக்கு கிளக்கு இசைந்த பெருநாங்கெல்லைக் குள்ளிட்ட நஞ்
34. சை புஞ்சை மாவடை மரவடை திட்டு திடல் புத்து புனல் அறுகு தா
35. னி ஆவரை கொளிஞ்சி அட்டபோக சுவாமியங்களும் சறு
36. வமானியமாக தானபூறுவமாகக் கொடுத்தபடியனாலே தியாகராச சாமிக்கு
37. அபிசேக நிவேதனம் அபிவிருத்தியாக நடப்பிச்சு வருவார்க்கு
38. இந்த தற்மசாதன கிராம ரெண்டுக்கும் யாதாமொருவன் பரிபா
39. லனம் பண்ணினவர்கள் காசியிலும் ராமேசுவரத்திலும் அனேகம் பிறம்
40. பிற்திட்டை கோடி கன்னிகாதானம் கோடி கோதானம்
41. பண்ணின பலன் அடைவார்கள் இந்த தர்மத்துக்கு யாதாமொருவன்
42. அகிதம் பண்ணினவன் காசியிலும் ராமேசுவரத்திலும் புண்ணிய மட