பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

43. ங்களிலும் அனேகம் கோகத்தி ஸ்ரீஅத்தி பிரமஅத்தி பஞ்சமகாபாதக
44. ம் பண்ணின தோஷத்தில் போகக் கடவராகவும் இந்தப்படிக்கு
45. இந்த தர்ம சாஸனப் பட்டையம் எழுதினேன் ராயசம் சங்கர ந
46. ராயணன் எழுத்து உ

4. சசிவர்ணேசுவரர் ஆலயச் செப்பேடு

மன்னர் முத்துவடுகநாத பெரியஉடையாத் தேவர் அவர்களால் கி.பி.1751-ல் வழங்கப்பட்ட இந்தச் செப்பேடு சிவகங்கை பற்றிய இரண்டு சிறப்பான செய்திகளைத் தெரிவிக்கிறது. சிவகங்கை தன்னரசின் முதலவது மன்னரும் முத்து வடுகநாதரது தந்தையுமான அரசு நிலையிட்ட சசிவர்ண பெரிய உடையாத் தேவர் கி.பி.1750ல் இறந்தார். இவரது நினைவாகப் பள்ளிப்படைக் கோயில் ஒன்றை சிவகங்கை அரண்மனைக்கு வடகிழக்கே கி.பி.1751ல் இந்தக் கோயிலினை சிற்பமுறைப்படி சமைத்து சிவலிங்க பிரதிஷ்டை செய்ததையும் அதனைத் தமது பெற்றோர்களான சசிவர்ணத் தேவர், அகிலாண்ட ஈசுவரி (பெரியநாயகி) பெயரால் வழங்கப்பட்டிருப்பது.

அடுத்து இந்த திருக்கோயிலுக்கு திருவிடையாட்டக் காணியாக காத்தாடியேந்தல் வாணியங்குடி, மானங்குடி, முடிக்கரை ஆகிய நான்கு ஊர்களையும் இறையிலியாக வழங்கி இருப்பதுமாகும். இந்தச்செப்பேடு மன்னர் முத்து வடுகநாதர் தமது பெற்றோர்பால் கொண்டிருந்த பாசத்தினைப் பறைசாற்றும் சிறப்பான ஆவணமாக அமைந்துள்ளது.

1. உ. சிவமயம்
2. ஸ்ரீமன் மகாமண்டலேசுவரன் அரியரான தளவிபாடன் பாசை
3. க்கிதப்புவார்கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதன்
4. பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோளமண்டலப் பிறதிட்ட
5. னாபசாரியான் தொண்டமண்டல சண்டப்பிறசண்டன் ஈள
6. மு கொங்கும் யாள்ப்பான தேசமும் கண்டு கெசவேட்டை கொண்ட
7. ருளிய ராசாதிராசன் ராசபரமேசுவரன் ராசமாத்தாண்டன் ராச
8. கெம்பீரன் ராசகுலதிலகன் இவளி பாவடி மிதிக் தேறுவார் கண்டன்,
9. மன்னரில் மன்ன மன்னர்சிரோமணி துட்டரில் துட்டன் சிட்டபரி
10. பாலகன் சேமத்தலை விருதுடையான் செங்காவி கொ
11. டையான் செம்பி வளநாடன் மதுரை வளிகண்டான் பட்
12. டமானங் காத்தான் தாலிக்கு வேலி தொண்டித்துறை காவ
13. லன் சேதுமூலா துரந்தரன் இராமனாத சுவாமி காரியாது
14. ரந்தரன் அசுபதி கெசபதி நரபதி தனபதி விசைய ரெகுனா
15. தச் சேதுபதி காத்த தேவரவர்கள் பிறிதிவி ராச்சிய பரிபா
16. லனம் பண்ணியருளா நின்ற சாலியவாகன சகாத்தம் 1673க்கு மே
17. ல் செல்லாநின்ற பிறசோற்பதி நாம ஸம்வத்ஸரத்து உத்தராயண