பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 67

மனெகங்கோடி தடாக

138.ப்பிறதி சட்டையு மநேகங்கொடி பிறம்மப் பிறதிசட்டையுஞ் சோடச மகாதாந

139. மும் பண்ணினவனும் பெற்ற சுகிற (த*)த்தை அடையக்கடவாராகவும் யிந்த படிக்குக்

140. கொடாமல் யாதாயொருவன் விகாதம் பண்ணியவன் அனெகம் அகிறகாரங் கெடு

141. த்தவன் கெங்கைக் கரையிலுஞ் சேதுக்கரையிலு(ம்*) மாதாபிதாகுருகாரம் ப

142. சுவைக் கொன்ற தோஷத்திலெ போகக் கடவராகவும் யிந்தப்படிக்கு அஞ்சுசா

143. தி எளுபத்துனாலு ஆவரணத்தார் சொல்ல வரணக் காற வெனைத்தலைப் புலி பூண்டு

144. காண்டான் செருவை காரன் குமாரன் (ப்) பட்ட யவரி சாதிவரி பணியமாகிய பெரிய திருமா

145. கிய முத்துக்குமாரு சேருவைக் காரன் உண்டு படுத்தி எளுதிவிச்ச பட்டயம் அரமனையார் யெ

146. ங்களுக்கு நடக்க வேண்டிய மரிய மரியாதம் யெந்தக்காரியமும் ராமநாதபுரத்தி

147. ல் அத்தகம் உங்களுக்கு மரியாதம் (ப்) பணணி விக்கு (மெ) மென்ற கட்டளையிட்டபடி

148. யிநாலெ யிந்தபட்டயம் யெளுதிக் கொடுத்தோம் அனுமக்கொடி யானிக்க மெ

149. ன்னு ஒரு சிறையும் வாங்கிச் சசிவர்ண மீசுரன் கொவிலுக்கு விட்டொம் யிந்த பட்டயமெ

150. யளுதிளான் மதுராபுரி முதலாந சேது ஆதிக்கம் முதலாக சிற்ப்பாசாரி விசை

151. யரெகுநாதக்காளி ஆசாரி குமாரன் முத்துக்காளி ஆசாரி கைய்எளுத்து.

152. காளிகாதேவி சகாயம் உ.
6. சதுரகிரிமடம் செப்பேடு

மன்னர் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் அவர்களால், கி.பி.1761-ல் சதுரகிரியில் உள்ள சுவாமி குழந்தையானந்த மட தர்மமாக சிறுதேட்டு கிராமத்தை கி.பி. 1760-ல் சர்வ மானியமாக வழங்கியதற்காக ஆவணம் இந்தச் செப்பேடு. ஐம்பத்து ஏழு வரிகளைக் கொண்ட இந்தச் செப்பேட்டில் தானம் கொடுக்கப்பட்ட காணிகளுக்கு விவரமான வகையில் வரையப்பட்டிருப்பது சிறப்பான தொன்றாகும்.

1. தேவி சகாயம் சுபதேயபூரீமன் மகாமண்டலேசுவரன் அரியராயர்தளவி

2. பாடன் பாசைக்கு தப்பு வராயிர கண்டன் மூவராய கண்ட கண்ட