பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 69

41. பத்தில் வட வயலில் வடக்கோடிய வாய்க்காலில் பெருமா வய
42. க்கல் தளைக்கும் கிளக்கு பெருமா வயக்கல் தளைக்கு கீள் இதன் கிளக்கு ஆவு
43. டைய வயக்கத் தளைக் கு கீள் அண்ணாவுடையான் செய்க்கும் கா
44. லடை வடகிளக்கு நொச்சியகுடி தளைக் கும் காவல் மா
45. னிய வாகையடி தளைக்கும் கிளக்கு மணி தளைக் குங்
46. இதன் கிளக்கு திருவாலங்காட் வயக்கல் தளை உ உசல் ஹெள
47. இதன் வடமேற்கு வேலாயுதன் வயக்கல் தளை இதன்ே
48. மற்க்கு தேவன் வயக்கல் தலை க தேவன் வயக்
49. கலுக்கு வடமேற்கு சுத்தன் வயக்கல் தளையில் பாதி உ ஹ ள
50. இன்நாங் கெல்லைக்குள் பட்ட விரையடி
51. சகலமும் சறுவ மானியமாய் சாதனம் பண்ணிக்குடுத்தனாலே
52. கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் சந்திராதித்தருள்ளத
53. வரைக்கும் ஆண்டு யநுபவித்துக் கொள்ள கடவாராகவும்
54. படி சாதனமும் எழுதினேன் சொக்கய்யரவர்கள் கை...
55. எழுத்து யட்டவணைச் கணக்கு மேற்படி பெரிய தகப்பனார் மகன் கெ....
56. ர் சொக்கு கைய்யெழுத்து தேவி சகாயம் உ
57. குரு சுவாமி துணை உ

7. வள்ளைக்குளம் செப்பேடு

முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, மன்னர் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவரது பிதிர் பக்தியினைக் குறிப்பிடும் மற்றுமோர் ஆவணம் இந்தச் செப்பேடு. கி.பி.1763-ல் இந்த மன்னர், தமது தந்தையாரது நினைவாக புனித காசி நகரில் மடம் ஒன்று அமைத்து பிராமண போசனம், மகேசுவர பூஜை முதலிய அன்னதானப் பணிகளாக வள்ளைக்குளம் என்ற கிராமத்தை தானமாக வழங்கியதைக் குறிக்கும் ஆவணம் இந்தச் செப்பேடு:

1. ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரியராய தள விபாடன் பாசை
2. க்குத் தப்புவார் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்
3. டநாடு கொடாதான் பாண்டிமண்டல ஸ்தாபனாசாரியன் சோள
4. மண்டலப் பிரதிட்டாபனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிறச
5. சண்டன் ஈளமுங் கொங்கும் யாள்பாணராயன் பட்டனமு மெம்மண்டலமும்
6. கண்டு கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுரன்
7. ராசமார்த்தாண்டன் ராசகுல திலகன் அரசராவன ராமன் அந்தம்பர கண்
8. டன் தாலிக்கு வேலி தளஞ்சிங்கம் இளஞ்சிங்கம் சேதுகாவலன் சேது
9. மூல ரட்சா துரந்தரன் தனுக்கோடி காவலன் தொண்டியந்துறை கா
10. வலன் செம்பிவள நாடன் தேவை நகராதிபன் முல்லை மாலிகைய