பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதுமையார் இலம்பகம்115



“அதுவும் நம்மைப்போலத்தான்; வேட்கை தீரவில்லை” என்றான்.

ஊர் புதிது; உற்ற துணைவி புதிது; உணவு புதிது; அவை ஒவ்வொன்றும் புதிது புதிதாக இருந்தன பாரதியின் கவிதைகளைப் போல.

இடைவேளை, ஒரு நாள் வெளியே இளநீர் பருகிவிட்டு வந்தான்.

“ஏன் எங்குச் சென்றிருந்தீர்?’ என்று கேட்டாள்.

“ஒருவருக்கு நான் கடன் பாக்கி; அதை முடித்து வந்தேன்” என்றான்.

“நன்றிக்கடன்; முதன்முதலில் எனக்கு எதிர்ப்பட்டவள் ஒருத்தி; அவளைப் பார்க்கத்தான் வந்தேன்; நீ கிடைத்தாய்”

“நல்ல சகுனம்; சுமங்கலியா?”

“அவளைச் சுமங்கலியாக்க முயன்றேன்; சுகம்மட்டும் தந்தேன்.”

“யுகம் வரை பேசலாம்; விளக்கிச் சொல்லுங்கள்”

“தேசிகப்பாவை அவளோடு பேசிவிட்டுச் சொல்லி விட்டு வந்தேன்.”

“என்னிடம் ஏதோ மறைக்கிறீர்கள்”.

எல்லாப் பெண்களும் பேசுவதுபோல அவளும் பேசினாள்.

“உரைக்கின்றேன்; ஒரு நாள் கூத்து; அவ்வளவுதான்”

“இது?”

“எங்கள் ஊரில் இது சகஜம், சீவகன் தெரியுமா? அவனும் அப்படித்தான்; அநங்கமாலையோடு கொஞ்சம் தொடர்பு உண்டு; பாவம் அவள் அவனுக்காகவே ஏங்கிக் கொண்டிருக்கிறாள்; அவன் ஊரை விட்டுப்போய்