பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேமசரி இலம்பகம்123



“உன் மனைவியர் எனைவர்?” என்று புதியவன் கேட்டான்.

“நால்வர்” என்றான்.

அவன் சற்றுப் பொறாமையும் பட்டான்; பரிதாபமும் பட்டான்.

“ஏன் கஷ்டமா ?”

“நான் ஒருத்தியைக் கட்டிக்கொண்டு வேதனைப் படுகிறேன்” என்றான்.

“நால்வரை மணம் செய்து கொண்டால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள்; நாம் நிம்மதியாக இருக்க முடியும்” என்றான்.

“நால்வரும் ஒன்று சேர்ந்து விட்டால்”

நகைச்சுவையை உண்டாக்கியது.

தானம், சீலம், தவம், இறைவழிபாடு ஆகிய இந்நால்வர் சேர்ந்து நல்வினை என்ற ஒரு மகனைப் பெற்றுத் தருவர்; அதுவே வீடு பேற்றிற்குரிய வழியும் தரும்” என்றான்.

“இவன் பேசும் தத்துவம் அவனுக்குப் பிடிக்கவில்லை. நிஜத்துக்கு வரமுடியுமா?” என்றான்.

“தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி என நால்வர் என் மனைவியர்” என்றான்.

“அங்கங்கே அவர்களை விட்டு வைத்திருக்கிறேன். பிள்ளைகள் பிறக்கவில்லை” என்றான்.

“அளவோடு மனைவிகளைப் பெற்றால்தான் வளமோடு வாழ முடியும்” என்றான்.

அவன் மேலும் பேசினான், “தானம், தருமம், சீலம், இறைவழிபாடு இவை இந்தச் சின்னவயதில் தேவைதானா! வயதானால் பார்த்துக் கொள்ளலாமே” என்றான்.