பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விமலையார் இலம்பகம்151



வேலியைத் தாண்டி வெள்ளாடு உள்ளே சென்று விட்டது; அதைப் பிடிக்க அவன் உடன் தாவவில்லை.

வாசல் வழியே போவதுதான் வழி என்று கொண்டான்.

அவள் அணிந்திருந்த நகைகள் அவள் வணிகன் மகளாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய உதவின; இவளும் ஒரு கேமசரிதான். முறைப்படி அணுகி னால் அவள் தந்தை உரைப்படி அவளை மணந்து அவளைத் தனியறையில் சந்திக்கலாம் என்று சிந்தித்தான்.

சோர்வோடு தினமும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெறுங்கையோடு வரும் கடை முதலாளி, விமலைக்குத் தந்தை நிப்புதியின் கணவர்; இன்று கையில் இனிப்பும், பையில் பூவும், கூடையில் பழமும், அவற்றோடு ஒரு பையனையும் பிடித்துக்கொண்டு வருவது புதுமையாக இருந்தது.

உள்ளே சென்று தன் மனைவியுடன் பேசினான்; மகள் ஒற்றுக்கேட்டாள்.

“விடாதீர்கள்” என்றாள் வீட்டுக்கு உரியவள்.

“யாரோ ஒரு திருடனைத்தான் அப்பா பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். அதனால்தான் விடாதீர்” என்று சொல்வதாகக் கருதினாள்.

அவன் தன் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பது அவள் நேரில் பார்த்தபோது அறிந்தாள். வடிவுக்கரசியாக அவள் முன் நிறுத்தப்பட்டாள். அந்தப் புனைவுக்கு அவர்கள் இது வரை பூட்டிக் காத்த நகைகள்தான் வகை செய்தன.

‘மணப்பெண்’ என்றால் அவளுக்குச் சில சம்பிர தாயங்கள் பின்பற்றப்படுகின்றன. போருக்குச் செல்கிறவன் என்றால் காக்கிச் சட்டை அணிவது போல் பணக்கார