பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156சீவக சிந்தாமணி



“உன் மீது புளியோதரை வாசனை வீசும்; அய்யர் மகன் நீ அதனால் இந்த வாசனை” என்றான். அவன் பிறப்பைச் சுட்டிப் பேசினான்.

புத்திசேனனைத் தமிழில் அவர்கள் ‘அறிவு’ ‘அறிவு’ என்று கூப்பிட்டார்கள்.

‘அறிவழகன்’ என்று நீண்டிருந்த பெயர் குறுகி அறிவு ஆகியது. அடிக்கடி இப்படி ஏதாவது பேசித் தொளைப்பான்; அதனால் அதை ‘அறுவை’ என்று மாற்றி விட்டார்கள்.

“ஏண்டா” அல்லிக் குளத்துக்கு மட்டும் ஏன் போகத் தயங்குகிறாய்; நீச்சல் அடிக்கப் பயமா என்று கேட்டான்.

அவன் கூச்சல் கேட்டுப் பின் விவரம் அறிந்தான்.

“சுரமஞ்சரியா!”

“அது ஒன்று தான் பாக்கி, அதையும் முடித்து விடுகிறேன்” என்றான்.

“அப்படியானால் உனக்கு ஒரு ‘கலைமாமணி’ பட்டம் தருகிறோம்; விழாவும் எடுப்போம்” என்றான்.

“அதற்கு மதிப்பே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறது”

“புதிய பட்டம்”

“காமதிலகன் என்று கூறுவோம்” என்றான் அறுவை.

மன்னர் திலகமாக வேண்டியவனை இப்படி அவர்கள் மடக்கிப் போட்டனர்.

சுரமஞ்சரியின் மூடிய கதவு திறக்க அங்கே ஒரு முதியவன் வந்து நின்றான்; அவன் அந்த ஊருக்குப் புதியவனாகவும் இருந்தான்.

“உன்னை யார் உள்ளே விட்டது” என்று அங்கே ஒரு குண்டுமணி தடுத்தாள்.