பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாமகள் இலம்பகம்19



இவற்றின் பொய்ம்மை வடிப்புகளில் அவனை அடியெடுத்து வைக்கக் கற்றுத்தந்தனர். ஊர்திகளைத் தள்ளி உரம்கொண்ட நெஞ்சும் உடலும் பெற்றான்.

பூக்களில் தாமரை போன்றும், விண்மீன்களிடையே ஒளிவீசும் திங்களைப் போன்றும், அடர்ந்து எதிர்ப்பதில் சிங்கம் போன்றும் ஆற்றலோடும் வீரத்தோடும் தனித்துச் செயல்பட்டான். மழலை மொழி பேசி மகிழ்வித்த அவனுக்கு எழுதப்படிக்கக் கற்றுத்தர விரும்பினர். அவனை ‘மையாடுக’ என்று சொல்லி ஒலை தந்து எழுத வைத்தனர். ஆரம்பக்கல்வி ஆறாம் வயது வருவதற்குள் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் நாமகள் இலம்பகம் ஆகியது. சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வியும் மனப்பழக்கம் என்பதற்கு ஏற்பத் தொடர்ந்து கல்வி கற்றான். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்னும் குறட்பாவின் கருத்துப்படி அவன் கற்கவேண்டிய நூல்களைக் குற்றமறக் கற்றான்; சான்றோர்கள் நூல் வழியாகத் தெரிவித்த அறக் கருத்துக்களை அவன் ஆழ்ந்து கற்று ஒழுக்கத்தால் சிறந்த நன்மகனாக வளர்ந்தான். கல்வி கேள்விகளில் சிறந்ததோடு ஆன்ற ஒழுக்கம் மிக்கவனாக வளர்ந்தான்.

வயதுக்கேற்பப் படிப்பும் கலைகளும் கற்றான்; வீரனாவதற்கு வேண்டிய வித்தைகளைப் பெற யானை ஏற்றம், குதிரை ஏற்றம், மற்போர், விற்போர் முதலிய படைக்கலப் பயிற்சிகளைக் கற்று நிகரற்ற வீரம் உடையவனாகத் திகழ்ந்தான். யாழ், குழல் முதலிய இசைக் கலைகளிலும் தேர்ந்தவனாக விளங்கினான்.

கல்வி நலனும் படைப்பயிற்சியும் கற்ற அக்காளையை அவன் ஆசிரியராக விளங்கிய அச்சணந்தி என்பார் அருகு அழைத்து அன்பு குழையப் பேசி எதிர்காலத்தை