பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவிந்தையார் இலம்பகம்25



பசுக்களைப் பறி கொடுத்தவர்கள் செய்வது அறியாது கலக்கம் அடைந்தனர்; இடையர்களின் தலைவனாகிய நந்தகோன் அவற்றை மீட்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்; ஊரில் இந்தச் சோம்பேறி இளைஞர்கள், “மாடு போனால் மறுபடியும் ஈட்டிக் கொள்ளலாம். இதற்காக யார் போரிடுவது” என்று சோர்ந்துவிட்டனர். நந்தகோனின் மகள் அழகில் மிக்கவள். அவளை அடைவதற்கு அந்தச் சேரியில் இருந்த இளைஞர் ஆர்வம் கொண்டிருந்தனர்.

‘எருதுகளின் கூரிய அம்பினை அஞ்சுபவனை இடையர் பெண் விரும்பமாட்டாள்’ என்று அவர்கள் வீரம் மதிக்கப்பட்டது. வீரத்திருமகனையே இடைப் பெண்கள் விரும்பினர். “வீரம் மிக்கவனுக்கு அவள் தாரம் ஆவாள்” என்று நந்தகோன் பறையறைவித்தான். ஆநிரையை மீட்டுக் கொண்டு வரும் வீரத்திருமகனுக்குத் தன் மகள் உரியள் எனவும், அவளோடு வரிசை என்ற பேரால் பசுக்கள் ஈராயிரமும் பொற்பாவைகள் ஏழும் தருவதாகவும் உரைத்தான்.

அந்த ஊர் இளைஞர்கள் செய்தி கேட்டார்கள். “கோவிந்தை” என்ற அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ளக் காத்திருந்தவர்கள் எல்லாம் காத தூரம் ஓடினார்கள். “கட்டி வெண்ணெய் போன்ற காரிகை கோவிந்தையானாலும் சரி, கொட்டிய முல்லை போன்ற நிறம் உடைய அரமகளிர் ஆயினும் சரி; வெட்டி வீழ்த்தும் செயல் உடைய வேடுவரை எதிர்க்க நம்மால் முடியாது” என்று விதிர்விதிர்த்து ஒடுங்கினர்.

சீவகனின் தோழர்களும், தம்பியரும் இச்செய்தி கேட்டனர். புதுமுகம் என்றால் நகைமுகம் காட்டும் பதுமுகன் சீவகனிடம் வந்து போர் தொடுப்போம் என்று துண்டினான். “நம்மால் இயலுமா” என்று சிந்தித்துப் பார்த்தனர். “அழகி ஒருத்தி கிடைப்பாளே” என்று