பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவிந்தையார் இலம்பகம்29



அவள் இரு புருவங்களைப் பார்த்தால்போதும். கயல் விழி என்று கேள்விப் பட்டிருக்கிறாயா? சிலர் அவளைக் ‘கயல்விழி’ என்றே கூப்பிடுகிறார்கள். கட்டமைந்த மேனி, தொட்டால் துவண்டு விடும் இடை, அழகுக்காகவே அவளை ஆராதிக்கலாம்; கோயில் சிலைபோல அவள் வடிவம் இருக்கும். இதெல்லாம் நான் சொல்லக்கூடாது. என்றாலும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. இந்தப் பேரழகியை நீ மணந்தால் அவள் பெருமகிழ்வு கொள்வாள்; என் மனைவி கோதாவரி அவள் அப்படியே உடம்பு பூரித்து விடுவாள். பெண்ணைப் பெற்ற பயன் அவள் அடைந்தவள் ஆவாள்.”

“சாதி இடை நிற்கும் என்று நினைக்கிறாயா? அவள் உன் பெண் சாதியாகிவிட்டால் அப்புறம் சாதியைப் பற்றியே பேச இருக்காது. நாம்தான் சாதிகளைப் பற்றிப் பேசுகிறோம்; கடவுள்கள் எங்கே சாதியைப் பாராட்டுகிறார்கள். வள்ளியின் கணவன் பேரைச் சொன்னால் உள்ளம் குளிர்வது இயற்கை முருகன் குறமகளை மணந்து கொண்டானே அந்த உறவைக் கண்டித்துப் பார்வதி ஒரு வார்த்தையும் சொன்னதில்லையே! உனக்குத் தெரியும் தேவேந்திரன் மகள் தெய்வயானையை அவன் ஏற்கனவே மணந்திருக்கிறான்; அவளை விட வள்ளியின் மீது தான் முருகனுக்குக் கொள்ளை ஆசை, நப்பின்னை கேள்விப்பட்டிருக்கிறாய்; அவள் எங்கள் சாதிப் பெண்தான்; கண்ணன் அவளை மணந்து சுகப்படவில்லையா? சாதிகள் இல்லை என்று சொல்வதற்கு ஒரு பாரதி தேவை இல்லை; முக்கியமாகப் பெண் பிடித்து விட்டால் அப்புறம் எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம்; நீ ஒரு முறை அவளை வந்து பார்த்தால் அதற்கு அப்புறம் நீ மறுக்க மாட்டாய்” என்று தொடர்ந்து பேசினான். தொடர்ந்து பேசுவது கேட்பதற்கு இனிமையாக இருந்தது. தான் அரசமகனாக இருந்து அவசரப்பட்டு முதல் தேர்வு கோனாரின் மகளையா மணப்பது என்று எண்ணினான். மற்றொன்று சேலை கட்டி