பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்39



நாம் அரசன் வணிகன் என்ற பேதம் பாராட்டத் தேவை இல்லை. நாம் உறவினர் ஆகிவிட்டோம்” என்றான்.

தனக்கு மகளோ மகனோ இல்லையே எப்படி உறவு கொள்ள முடியும் என்று சிந்தித்தான்; கொடுக்கல் வாங்கல் இல்லாமல் உறவு எப்படிக் கிடைக்க முடியும் என்று வியந்தான்.

“நமக்குள் கொடுக்கல் வாங்கல்”

“இனித் தொடரப்போகிறது” என்றான்.

“எனக்கு மகன் மகள் யாரும் இல்லையே” என்றான்.

“எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்”

“இரண்டாவது தாரமா”

“உனக்கு இல்லை;அவளை உன் மகளாக நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்.”

“என் மனைவிக்கும் ஒரே ஏக்கம்; ஒரு மகள் இருந்தால் எவ்வளவு மகிழலாம் என்று சொல்லுவாள்; நான் கொண்டு சென்ற பொருளைக் கொண்டு புதுப்புது நகைகள் செய்து வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு மகளைப் பெற வேண்டும் என்று என்னைத் தொல்லைப் படுத்துவாள்.”

“நீ என்ன செய்ய முடியும்.”

“அதனால் என்னிடம் விரும்பி வருவாள்; நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று நம்புவாள்; வயிற்றைத் தொட்டுப் பார்ப்பாள், சாப்பிட்ட மாதிரி இருக்கவே இருக்காது; அவள் பசி தீரவே இல்லை.”

“வளர்ந்த மகள் உனக்குத் தருகிறேன்; நீ கொண்டு சென்று தக்கவனுக்குத் தந்து அவனை மருமகனாகக் கொள்க. எனக்கு ஆதரவாக இருக்கும்” என்றான்.

“இவள் விலை போகவில்லையா?”