பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64சீவக சிந்தாமணி



விறுப்பைக் கண்டது. அவளைக் கட்டி அணைக்க அவன் தோள்களுக்கு ஆணையிட்டான்.

ஆரவாரம் வானை எட்டியது; பெண்கள் தாமே அவனை அடைந்தது போன்று பெருமகிழ்ச்சி காட்டினர். நம்பியை அடைய அவள் தவம் செய்தவள் என்று பாராட்டினர். மன்மதனையும் ரதியையும் அவர்கள் நேரில் கண்டது போன்று மகிழ்ந்தனர். சிறு கீறலும் படாத கனியை அவன் பெற்றான் என்று மூரல் கொண்ட மகளிர் பேசினர். அவன் தோள்கள் இதுவரை எந்தக் கன்னியையும் தோய்ந்ததில்லை என்றனர், கோவிந்தையை அவள் தந்தை மணக்க வற்புறுத்தினார். அவன் மறுத்துவிட்டதும் நல்லதாகப் போயிற்று. ஆக்கப் பொறுத்தவன் ஆளப் பொறுத்தான்; ஆய மகள் அவள் பால்மணம் மாறாதவள் என்பதால் அவன் விரும்பவில்லை; அவளைப் பற்றி அவள் தந்தை எப்படி அறிமுகம் செய்தார் தெரியுமா?”

“வெண்ணெய் போல் தொட இனிமையானவள், பால் போல் இனிய சொல்லினள்; பசும் நெய் போல் மேனியை உடையவள் என்று அறிமுகம் செய்தார்.

“இப்பொழுது இவளைப் பிடித்தது எதிர்பாராத ஒன்று; இவள் தந்தை செல்வச் சிறப்பும் ஆட்சி உயர்வும் பெற்ற மாமன்னன்; அவன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் கொடுப்பான்; மந்திர சக்தி வாய்ந்தவன்; படைபலம் மிக்கவன்; எதையும் அவன் துணையால் சாதிக்க முடியும்; மாமனார் வீடு பெரிய இடம்; எந்தக் குறையும் இல்லை; பெண்ணும் கற்றவள்; இசையில் வல்லவள்; அறிவு நிரம்பியவள், பொறுமை மிக்கவள்; கருவம் என்பது சிறிதளவும் இல்லாதவள்; அவன் இனி எத்தனை பேரை மணந்தாலும் இவளுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது; அந்த மாதிரிப்பெண் இந்தப் பக்கம் கிடைக்காது” என்று பாராட்டிப் பேசினார்கள்.