பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94சீவக சிந்தாமணி



ஒருவர் ஆரம்பித்தார், “சீவகன் ரொம்பவும் நல்ல பிள்ளையாயிற்றே ஒருவர் ஜோலிக்கும் போகமாட்டானே” என்றார்.

“யானையின் துதிக்கையைத் தொட்டுப் பிடித்தான்” என்று குற்றம் சாற்றினர் காவலர்கள்.

“யாராக இருந்தாலும் என்ன ? கை தொட்டுப் பிடிப்பது குற்றம்தான்” என்றார் அவர் நடுத்தர வயதைக் கடந்தவர்.

“கூடாது தான்” என்று தலையசைத்தார்; தலை யசைத்தே பழக்கம் உடைய தலைவர் அவர்.

“யானை வளைத்துப் பிடித்த பெண்ணை இவன் தொட்டு இழுத்தான்”

“இது மிகத் தவறு” என்றான் மென்மையான குரல் படைத்த மெல்லியலான் ஒருவன், “கட்டியங்காரன் கைப்பிடிக்கும் பெண்ணுக்கு எல்லாம் இவன் மைதீட்டுகிறான். அநங்கமாலைக்கு இவன் சொக்குப் பொடி போட்டு அவளை மயக்கிவிட்டான்” என்றான் ஒருவன்.

“இவன் பழைய குற்றவாளி, இவன் இதற்கு முன்னும் நிறைய வழக்குகளில் பதிவாகி இருக்கின்றான்” என்றான். கொஞ்சம் வயதான காவலாளி.

“இந்தமாதிரி ஆட்களை வெளியே விட்டு வைக்கக் கூடாது; நாங்கள் குறுக்கிடமாட்டோம்” என்று ஒட்டு மொத்தமாகக் குரல்தந்தனர்; இராஜதுரோகம் நினைக்காத வெகுஜனங்கள் இவர்கள், பொதுமக்கள் என்றால் என்ன என்பதை அறிய இவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

தடுத்து நிறுத்த ஒரு பெண்மணி வீராங்கனையாகக் குரல் கொடுத்தாள்.