பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதந்திரப் பறவைகள் O. 123 நம்பிக்கை வைத்தேன் என்று தன்னிரக்கம் கொண்டான் அவன். - : அந்த நேரத்திலிருந்து சோமு ஆளே அடியோடு மாறிப் போனான்: வீட்டுக்கு வந்ததும், முக்கிய இடத்தில் எடுப்பாக மாட்டியிருந்த சுகானந்த அடிகள் படத்தை அவசரமான் அகற்றினான். அலமாரியில் அடுக்கி வைத்திருந்த ககானந்தச் உபதேச நூல்களை எல்லாம் எடுத்து வெந்நீர் அடுப்பில் போடலாம் என்று ஒரு மூலையில் வீசி எறிந்தான். சோமுவைப் பற்றியிருந்த பக்தி என்கிற போதை சொல்லாமல் கொள்ளாமல் ஓடி மறைந்தது. 莓