பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நாடகம் "இதில்லோ என்னை தெரிகிறதா? அருகில் வெடித்த திடீர் கேள்வி சுந்தரத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பண் நிலையத்தில் காத்திருந்தார் அவர். புன்முறுவல் பூத்தபடி அவர் பக்கத்தில் நின்ற நபரை. சட்டென அவரால் இனம் கண்டு கொள்ள இயலவில்லை. பார் இது, இதுக்கு முன்னே இந்த ஆளை எங்கே பார்த் திருக்கிறேன் என்று மனம் குறுகுறுத்தது. ஒல்லியாய், நெட்டையாய் தோன்றிய அவன் சிரித்தான். தேரியலியா? நாராயணன். ரெட்டை மண்டை-அதுதான் டபிள்ஹெட்-பெருமாள்.சாமி வகுப்பில் நாம ஒண்ணாகப் படிச்சோமே. சொக்கலிங்கம், ராமையா விநாயகப் பெருமாள்...” நினைவின் ஸ்விச்சை தட்டிவிட்டான் அவன். கந்தரத் தின் மனக்குகையில் வெளிச்சம் பிறந்தது. அங்கே மக்கிக் கிடந்த சாயைகள் பல புரண்டன; நெளிந்து கொடுத்தன. அடடே, நாராயணனா? குட் ஒல்ட் ஃப்ரண்ட் தாராயணன் இறந்த காலமே உயிர்பெற்று எதிரே வந்து நீற்பதுபோல் இருக்குது உம்மைப் பார்க்கையிலே, ஆளு; அடையாளமே தெரியவியே. ஒரேயடியா மாறிப் போயிருக்கீரே என்று சுந்தரம் உற்சாகமாகப் பேசினார். "இருக்கலாம் இருபது முப்பது வருடங்கள் ஒடியிருக்கு. வாழ்க்கைச் சுழலில் சிக்கி, அடிபட்டு-எவ்வளவோ அனுபவங்கள்; மோதல்கள் சிவவெற்றிகள். நிறையத் தோல்விகள்! எல்லாம் தங்கள் கவடுகளை உடம்பிலே