பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8ே () வல்லிக்கண்ணன் கணாம். கமலம் அந்த வீட்டிலே சம்பளம் இல்லாத வேலைக் காரியாகத்தான் இருக்கிறாள். ஏகப்பட்ட வேலைகள். அப்படி வேலை செய்தும் நல்ல பெயர் இல்லே. இந்த ரீதியில் பலப்பல சொன்னாள். கொல்லன் உலைத் துருத்தியைப் போல சிவசிதம்பரத் தின் நெஞ்சு அனல் பெருமூச்சை வெளியே தள்ளியது. "தாமும் எவ்வளவோ பிரயாசைப்பட்டு, நல்ல இடமாக வலை போட்டுத் தேடினோம். கமலம் பெரியமனுஷி ஆகிப் பதினஞ்சு வருசம் ஆயிட்டுதே. இன்னும் வீட்டோடு வைத்திருப்பது தல்லாயில்லை என்று, கிடைத்த இடத்தை முடிச்சோம். பையன் சுமாராப் படிச்சிருக்கான். தனியார் நிறுவனம் ஒன்றிலே சாதாரண வேலை ஒண்னு பார்க் கிதான். பெரியதனங்கள் பண்ணமாட்டான்; பேராசைப்பட காட்டான் என்று நினைத்தோம். அவனும் இந்த லெச்சனத் திலேதான் இருக்கிறான். என்ன பண்ண முடியும் கமலத்தின் தலையெழுத்து இவ்வளவுதான்னு நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்...” --சிவசிதம்பரம் இப்படி தனக்கும், தன் மனைவிக்கும் ஆறுதல் கூறிக் கொண்டார். ஒருநாள் கமலத்துக்குக் கல்யாணமாகி ஆறேழு மாதங்கள் கழிந்தபோது - சிவசிதம்பரம் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஈலிச்சேரில் சாய்ந்திருந்த சமயம் வாசல் கதவு தட்டப்பட்டது. - "யாரது?’ என்று கேட்டவாறு, எழுந்துபோய், கதவைத் திறந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார். அங்கே கமலம் கையில் ஒரு பையுடன் நின்றாள். "வாளன்றுகூட சொல்லத்தோன்றாமல், என்னம்மா, நீ மட்டும்தான் வந்திருக்கியா? மாப்பிள்ளை வரலியா?” என்று விசாரித்தார் அவர். விலகி நின்று மகளுக்கு வழிவிட்டார்.