பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 63 தங்கள் வீட்டில் விசேஷம் வந்தால்-விசேஷமாக வடை பாயசம் என்று ஏதேனும் செய்தால் அவருக்கும் அன்போடு கொடுத்து அனுப்பினார்கள். அன்பு அன்பை வளர்க்கிறது. அன்பு மனிதநேயத்தை வளர்க்கிறது, அன்பு உள்ளத்தில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கத் துணை புரிகிறது. அன்பு வாழ்க்கைக்குத் தனி அர்த்தம் தருகிறது. - சிவசிதம்பரம் இந்த உண்மையைப் புரிந்து கொண்டார். அவர் உள்ளத்தில் கவிந்து கிடந்த இருட்டு மெது மெதுவாக விலகியது. அன்புப் பேரொளி பிரகாசிக்கிற இடங்களில் இருட்டுக்கு. இடம்தான் ஏது? 罚