பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் () 79. குறுக்குத் துறையிலும், ரோட்டில், தோப்புகளில். மரங்களின் கீழே, மற்றும் கோயிலைச் சுற்றிலும் ஜனத்திரள்: வண்டிகள், சைக்கிள்கள், இதர வகை இயந்திர வாகனங்கள் மிகமிக. மாம்பழ வியாபாரம் வெகு அதிகமாக நடைபெற்றதால், மாம்பழங்களை வாங்கிக் கடித்துத் தின்றபடி காட்சி அளிக்கும் பொம்பிளைகளும் பிள்ளைகளும் ஆண்களும் நெடுகிலும் தென்பட்டார்கள். - நாகரிகத் தோற்றம் கொண்ட பெண்கள்கூட கச்சத்தை ஒதுக்கிவிட்டு மாம்பழத்தைக் கடித்து சுவைத்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். கந்தபிள்ளைக்கு அவை எல்லாம் ரசிக்கப்படவேண்டிய இனிய காட்சிகள் ஆயின. அப்படிப் பார்த்து மகிழ்ந்து நடந்தபோதுதான் அவர்கள் எதிர்ப்பட்டார்கள். பஞ்சவர்ணமும் மீனாட்சியும். ஆளுக்கு ஒரு மாம்பழத்தைக் கடித்துச் சுவைத்தபடி, தெருவோடு நடந்து கொண்டிருந்தார்கள். ஏதோ பேசிச் சிரித்தபடி. - "இந்த ரெண்டு பேரும் ஆத்திலே என்ன அட்டகாசம் பண்ணினாங்க தெரியுமா: குளிக்கிறோம்னிட்டு தண்ணியிலே ஒடிப்பிடிப் பிடிச்சு, ஒருத்தி மேல ஒருத்தி தண்ணியை வாரி இறைச்சு, சத்தம் போட்டுச் சிரிச்சு...நல்ல வேடிக்கைதான். எரிஞ்சு விழுந்தவங்களும் இருந்தாங்க. பக்கத்திலே குளிச்சுக் கிட்டு நின்னவங்க, மேலே தண்ணிபட்டா கம்மா பொறுத்துக் கிட்டா இருப்பாங்க? . ரோடின் ஓரத்தில் நிழலில் ஒதுங்கி நின்றவர்களில் ஒருவன்தான் இப்படிச் செய்தி ஒலிபரப்பினான்.