பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ2 (; வல்லிக்கண்ணன் விடப்பட்ட குட்டி மிருகங்க மாதிரி ரகளை பன்றது இயல்பாக இருக்கு. நீங்களும் எத்தனையோ வீடுகளிலே பாத்திருப்பீங்க. அதே மாதிரித்தான் பெரிய பொம்பிளைக சிலபேரும்-புருசனால் கார்வார் பண்ணப்பட்டு அடக்கப் படுகிற மனைவி 0ாருகளிலே சிலரும் நடந்து கொள்றாங்க 'புருசன் தலை மறைஞ்சதும் இஷ்டத்துக்கு செயல் புரிவது ஆவங்களுக்கு பழக்கமாகவும் வழக்கமாகவும் ஆகிப்போகுது. பஞ்சவர்ணமும் அவள் தோழியும் அப்படிப்பட்டவங்கதான்னு திணைக்க வேண்டியிருக்கு என்று கந்தபிள்ளை லெக்சரடித் தார். 'உம்.இருக்கும் இருக்கும் என்று தலையை ஆட்டினார் கற்றவர். - ‘இன்னும் ஒண்ணு, கும்பல் சில பேருக்கு துணிச்சல் உணர்வு உண்டாக்குது. கூட்டம் நடுவிலே, நம்மை யாரும் கண்டுக்கிடமாட்டாங்க-நமக்குத் தெரிஞ்சவங்க இங்கே யாருமில்லே-என்ற தைரியத்துலே, குறும்புக் குணமும் விளையாட்டுப் புத்தியும் பெற்றவங்க துணிஞ்சு என்னென் னவோ பண்ணுவதும் சகஜமா இருக்கு. அதுலே அவங்களுக்கு அலாதியான சந்தோஷம் ஏற்படுது. இவங்க ரெண்டுபேருக்கும் அப்படி ஒரு துணிச்சலும் சந்தோஷமும் ஏற்பட்டிருக்கும்னு தோணுது. உள்ளுர்லேயும், தெரிஞ்சவங்க மத்தியிலும் இலங்க இப்படி எல்லாம் செய்வாங்களா? யோசிக்க வேண்டிய விஷயம் என்றும் கந்தபிள்ளை கூறினார். ஆமா ஆமா என்று தான் சொல்ல முடிந்தது அண்ணாச்சியால், D