பக்கம்:சுதந்திரமா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - சுதந்தரமா!

உளுத்தம் பருப்புக் கிடைக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி யெல்லாம் பிறகுதான் கேட்கிருர்கள். முதல் கேள்வி காலப்பற்றித்தான். அது மட்டுமா? " ஜாக் கிரதையாக இருங்கள் ஸார்; பட்ட காலிலே படும். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேணும்” என்று எச்சரிக்கை வேறு செய்கிருர்கள்.

நாம் அதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கிருேமா? யாராவது காலப் பற்றிக் கேட்காமல் நமக்குப் பக்கத்தில்

வந்துவிட்டால், ஸார் ஸார், அப்படியே கில்லுங்கள்: காலே மிதித்து விடர்தீர்கள்” என்று பட்ட காலப் பற்றி விளம்பரம் செய்கிருேம். வாஸ்தவமாகவே அதன் மேலே ஒரு சிறு துரும்பு படட்டும், ஒரே புயல்தான் ; துடிதுடித்துப் போகிருேம். ஆயிரக் தடவை ' பட்ட காலிலே படும்” என்ற பழமொழியை நாமும் சொல்லு கிருேம்; பிறரையும் சொல்லும்படி வைத்து விடுகிருேம்!

சில பத்திரிகைகளில் பிரமுகர்கள் உள்ளுரிலிருந்து வெளியூருக்குப் போனலும், வெளியூரிலிருந்து உள்ளுருக்கு வந்தாலும் அதை ஒரு விசேஷச் செய்தியாகப் போடு வார்கள். ஒருவர் எவ்வளவோ பணக்காரராக இருக்கலாம், படித்தவராக இருக்கலாம். முதல் வகுப்பு வண்டியிலேயே போகலாம். ஆலுைம் அவர் போக்கு வரத்தைப் பற்றிப் பத்திரிகைக்காரருக்குக் கவலை இல்லை. ஏதாவது ஒரு பெரிய கமிட்டியில் அவர் அங்கத்தினராக வந்துவிட்டால் போதும், உடனே அவர் பிரயாண விவரம் - பத்திரிகையில் இடம் பெற்று விடுகிறது. அவர் எங்கேயாவது துக்கம் விசாரிக்கப் போகலாம்; அல்லது கல்யாணத்துக்குப் போகலாம். எப்படியானல் என்ன? அவர் ஊரை விட்டுப் போவது பத்திரிகைக்காரர்களுக்கு ஒரு புதிய செய்தியாகி விடுகிறது. படாத காலுக்கு வராத கெளரவம் பட்ட காலுக்கு இப்படித்தான் வருகிறது. உண்மையிலே கெளரவம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/58&oldid=685965" இலிருந்து மீள்விக்கப்பட்டது