பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 எண்ணுக என்று உபதேசம் செய்தனுப்பினர் அடிகள். அவர்களையும் மீறி அற்புதங்கள் நிகழ்ந்து வந்தன. அவற்றுள் இதுவுமொன்று. திருவருட்பா வரலாற்றில் தொழுவூராரும் இதைக் குறிப்பிடு கின் ருர். எப்படி தண்ணிர் விட்டு விளக்கெரியும்? இஃது உண்மையாக நடந்த நிகழ்ச்சி. பகுத்தறிவு வேலை செய்யவில்லை. விஞ்ஞானம் விழிக்கிறது. இஃது அருட்செயல்; இதற்கு விளக்கங்கூற அரு ளறிவு வேண்டும். சுவாமிகள் தமது அருளறிவால் 'சந்நிதியின் முன்னே எரிந்ததுகாண்” என்றனர். 1, MITATIONS OF SCIENCE 6T6ör go HT soir flifu uff ஓரளவிற்குமேல் விஞ்ஞானம் வேலைசெய்யாது என் பார். சமரச சுத்தசன்மார்க்க சத்திய தருமச்சாலை இந்த நாளில் சுவாமிகள் தாம் வந்தவேலே யைச் செய்து நம்மையெல்லாம் உய்விக்க உளங் கொண்டார். மனிததேகத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இவ்வுலகில் காலமுள்ளபோதே பெறவேண் டியது ஒப்பற்ற பேரின் பசித்திப் பெருவாழ்வு. அவ்வாழ்வைப் பெறுவதற்குக் கடவுளின் அருள் விளக்கம் வேண்டும். அவ்வருள் விளக்கம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையாகிய சீவகாருண்ய ஒழுக்கத்தால் உண்டாகும். இரக்கமே தன்னுயிர் என்றும், இரக்கம் ஒருவுமென் னில் தன்னுயிரும் ஒருவுமென்றும் அடிகள் கூறுவர். இரக்கமும் கருணையும் வளரும்போது அருள் விளங்கும். அருள் விளங்கும்போது சிவம் விளங்கி வயப்படும். அதற்குக் கருணையுஞ் சிவமுமே பொருளெனக்