பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சிவபரம்பொருள் மணிவாசகப் பெருமானைச் சுத்த வெளியாக்கிக் கலந்தவாறுபோல இராம லிங்கப் பெருமானையும் கலந்துகொண்டது. இதை அவர் வாயிலாகவே அறியலாம். நானுன்ை தானைன் நானும்தா னுமானுன் வானுன்ை ஞான மணிமன்றி லாடுகின்ருன் கோனைன் என்னுட் குலாவுகின்ற கோமானே -திரு. 6 : 1.24:1 மேலும் அன்புருவம், அருளுருவம், இன்புருவ மாகிய முத்திறல் வடிவங்களையும் மணிவாசகர் பெற்றவாறு இராமலிங்க சுவாமிகளும் பெற்றனர். இதனை, மன்னுகின்ற பொன்வடிவு மந்திரமாம் வடிவும் வான்வடிவும் கொடுத்தெனக்கு............ - -திரு. 6 : 38: 61 என்பதனுல் அறியலாம். ஆகவே, வான் கலந்த ஒரு வ ைர வான் கலந்த ஒருவரால்தான் உணர்ந்து அறிந்து காணமுடிந்தது. தம்மைச் சிவங் கலந்த செய்தியை விளக்க வந்த அ டி க ள் நாம் பெறும் புருடார்த்தங்கள் நான்கு என்று கூறுவர். அவை (1) ஏமசித்தி, (2) சாகாக் கல்வி, (3) தத்துவ நிக்கிரகஞ் செய்தல், (4) கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்பன. இதைச் சுவாமிகள் உபதேசித்தருளிய உண்மை நெறியிற் காணலாம்.