பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 போல் எண்ணுவார் இதயம் ஆண்டவன் குடி கொள்ளும் கோயில். உயிர்களுக்கு அன்பு காட்டு வதுதான் கடவுளுக்குச் செய்யும் உண்மையான வழிபாடு. இவ்வழிபாட்டிற்குத்தான் அன்பு வழி பாடு என்று பெயர். இதற்குச் சீவ தயவு வளர வேண்டும். ஆன்மநேய ஒருமை வரவேண்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டின் உண்மை விளங்க வேண்டும். ஆதலால் அ டி க ள் ஆன்மநேய உரிமை கொண்டு மக்களையெல்லாம் அன்புநெறி யில் நிற்க வேண்டுகின் ருர். இந்நெறிக்குச் சாதி யில்லை; சமயமில்லை; ம த மி ல் லை; குலமில்லை; கோத்திரமில்லை; மனித உடல் பெற்ற மக்கள் எல் லாம் ஒருமையுடையவராய் உலகியல் நடத்த வேண்டும். சமூக வாழ்வில் உயர்ந்தாரும், ஒத் தாரும், த ழ் ந் த ா ரு ம் ஆன்மநேய ஒருமை உணர்ந்து அன்புகொண்டு வாழவேண்டும் என்று இறைவனே வேண்டுகின்ருர். ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரு மெவரும் ஒருமையுள ராகியுல கியல் நடத்தல் வேண்டும் -திரு. 6: 22:4 அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாநா னன்புசெயல் வேண்டும் -திரு. 6: 22:1 உண்ணுடி உயிர்களுறுந் துயர்தவிர்த்தல் வேண்டும் -திரு. 6: 22:3 இருளாமை யுறல்வேண்டும் எனையடுத்தார் சுகம்வாய்ந் திடல்வேண்டும் எவ்வுயிரு மின் படைதல் வேண்டும் -திரு. 6: 22:10