பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கோயிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்பவர் பல கலசங்கள் வைத்து என்னென்னவோ செய்வார்கள். கணையாழி வஞ்சகர் ஊருக்கு வந்ததால் மாசுபட்டது என கோயிலில் குடமுழுக்குச் செய்வது போல் கண்ணிரால் கழுவித் தூய்மை செய்தாளாம். ஆயிரம் கலசம்' என்னும் கம்பரின் எண்ணிக்கை வியப்பளிக்கின்றது. இது காறும் கூறியவற்றால், கம்பரின் கருத்து வெளி யீட்டுப் புதுமை இமயம் அளவு உயர்ந்துள்ளமை புலனாகும்.