பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 இப்பாடலில், புண் சொல்லியதாகவும், போந்த தன்மை உரைத்ததாகவும், புகை ஒதியதாகவும், மீண்டிலாச் செயல் காட்டியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. சொல்லுதலும் உரைத்தலும் ஒதுதலும் காட்டுதலும் இவற்றின் செயல்கள் அல்ல. உரிய பொருள் இன்றி ஒப்புடைப் பொருள்கள்மேல் வினைகள் புணர்த்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலுள்ள தொடர்களிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளன. இவை, காப்பியத்திற்குச் சுவை பயக்கும் சிறப்பான கூறாகும்.