பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை புதுவைக் கம்பன் கழகச் செயலாளர் புலவர் கம்ப வாணர் உயர்திரு அ. அருணகிரியவர்கள், கம்பராமாயணம் தொடர்பாக ஒரு நூல் எழுதித் தரும்படி என்னிடம் கேட் டார்கள். அதன்படி, கம்பராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த சுந்தரகாண்டம் பற்றி எழுதி இந்நூலை உருவாக்கி னேன். கம்பராமாயணம் மிகவும் சிறந்த கருத்துகள் அடங்கிய ஒரு சுரங்கம்; அதிலும், சுந்தர காண்டம் மிக உயர்ந்த கருத்துகளை உள்ளடக்கிய மாபெருஞ் சுரங்கப் பகுதியாக உள்ளது. அந்தச் சுரங்கத்திலிருந்து சில கருத்துப் பொருள் களை எடுத்து விளக்கி அக் கருத்துப் பொருட்கட்கு இந்நூல் வடிவம் தந்துள்ளேன். கம்ப ராமாயண் ஒலைச் சுவடிகள் இருநூற்றுக்கும் மேல் உள்ளன. கம்பராமாயணத்தைப் பலர் பதிப்பித் துள்ளனர். பதிப்புக்குப் பதிப்பு வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள், எஸ். இராஜம் அவர்கள், பதிப்பாசிரியர் குழு அமைத்துப் பல படிகளையும் ஆராய்ந்து ஒப்பு நோக்கச் செய்து, மர்ரே அண்டு கம்பெனி-சென்னை என்னும் நிறுவனத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள பதிப்பையே, என் நூலுக்கு அடிப்படை ஆதாரமாகக் கொண்டு எழுதி யுள்ளேன். s - யான் இப் பதிப்பினைத் தேர்ந்தெடுத்ததற்கு உரிய காரணம், தமிழ் யாப்பிலக்கணம் அறியாதாரும், எளிதில்