புதையல்
முப்பாலுக்கு அப்பாலோர் மொழிநூல் இல்லை; முழுதுலகும் ஏற்றுள்ள உண்மை யாகும். இப்பாலை மூன்ருக்கிப் பகுத்துக் காட்டும்
எழிலுடைய இலக்கியமும் உலகில் ஏது? தப்பாமல் திருக்குறளைப் பொருள்புரிந்து
தாமுணர்ந்தார் தடம்பிறழ்ந்த வரலா றில்லை! ஒப்பாரும் மிக்காரும் இல்லா அண்ணு
உன்உரையை நாளெல்லாம் நாடு கேட்கும்:
காமத்துப் பாலென்ருல் கசப்பாய் எண்ணிக்
கானகத்து முனிவரைப்போல் நடித்தோர் கூட "ஆமதற்கு கிகரில்லை' என்றே கெஞ்சில்
ஆதரவு தெரிவிப்பார்! வாழ்க்கை இன்பம் தாமதித்தால் திரும்பிவர முடியா தன்ருே?
தமிழினிலே செறிந்துள்ள அகச்சு வைக்குப் பாமரரும் பொருள்புரியச் செய்தாய் அண்ணு;
பழச்சாறு தேந்தாய்! அதனுல் காங்கள்
சேரத்துச் சிறியதம்பி இளங்கோ யாத்த
சிலம்புதரும் பல்சுவையில் காத இலத்தான் வீரத்தை விடமிகவும் விரும்பிக் கற்ருேம்!
வெறியாட்டாய்க் கடல்கொண்ட பூம்பு காரைத் துாரத்தில் கரைமீதில் புதிதாய்த் தோன்றத்
துரக்கிவைத்து நிறுத்திடவே கனவு கண்டோம்; பாரத்தைச் சுமக்கின்ற கல்லின் சிற்பம்
பழம்பெருமைக் காவியத்தைப் படைத்த தங்கே!
101