டிவி
'ஆட்டிவிட்டால் யாரொருவர் ஆடா தாரே?
அவனன்றி ஓரணுவும் ஆடா தென்பார். ஆட்டிவிட்டால் தஞ்சாவூர்ப் பொம்மை கூட
ஆடிவிழ மாட்டாமல் அமைத்துள் ளார்கள். காட்டிவிட்டால் மெய்ம்மைக்கு மதிப்புத் தாழும்;
கட்டிவிட்டால் அவிழ்ப்பதற்கும் ஒருவர் தேவை. ஈட்டி விட்டால் வேகமாகப் பாயும்; செல்வம்
ஈட்டிவிட்டால் செலவழிக்க மனம்வா ராது:
இருட்டிவிட்டால் கள்வர்க்கு நன்மை; செய்தி
எட்டிவிட்டால் காவலர்க்கு வசதி யாகும்! உருட்டிவிட்டால் பந்தாளுல் உருளும்; காற்றை
ஒட்டிவிட்டால் நசுங்கிப்போய் உருவம் தேயும்! சுருட்டிவிட்டால் தமக்குத்தான் சொந்த மென்று சொத்துரிமை பேசிடுவார் சுயக லத்தை வெருட்டிவிட்டால் சமதர்மம் தழைக்கு மென்பார்.
வெண்டிவிட்டால் குழம்புகன்ருய் மணக்கும், ஆமாம்!
ஊட்டிவிட்டுத் தாய்ப்பறவை வளர்க்கும் குஞ்சை
உண்டிவிட்டால் வளர்வானே மனிதன் நாளும்: மாட்டிவிட்டுக் கழற்றுவது சுலபமாகும்;
மாடிவிட்டுக் கீழிறங்க மனம்கேட் காது. வாட்டிவிட்டு மாமிசத்தைத் தின்ருன் ஒர்காள்.
வட்டிவிட்டு முதல்வாங்கார் கெட்டிப் பிள்ளை. நாட்டிவிட்டுக் கொடிபறக்க வைத்தான் சேரன்;
நாடிவிட்டுப் போயினரே வடவ மன்னர்!
15