கடவுள்
கையொன்று செய்ய விழி யொன்று நாடக்;
கருத்தொன்றை எண்ணிட, வாய் வேறு பேச : மெய்யென்று மற்றவர்கள் மிரட்சி கொள்ள மேலெழுந்த வாரியாகக் கடவு ளுக்குச் செய்கின்ற பூசைதனை எவ்வா றேற்பார்?
செகப்புரட்டு வேண்டாமென் றுரைத்த சொற்கள் பொய்யென்று கினையாதீர் என்பதற்குப்
பொதுமன்றில் கதையொன்று சொன்னர் அண்ணு:
சத்தியுள்ள கடவுளெல்லாம் கிறைந்த காஞ்சித்
தலத்தினிலே கடைவீதி தன்னி லே, ஓர் சித்திரமாய்ப் பிள்ளையாரின் சிறிய கோயில்
சிறப்பான மகிமையோடு விளங்கல் உண்டு. கைத்தறிக்குப் பெயர்போன நகர மன்ருே?
கனவான்கள் பட்டாடை உடுப்பர்! மற்ருேர் சுத்தமான நூலாடை வாங்கிக் கொள்ளச்
சுற்றிவந்து தெருத்தெருவாய்க் கூவி விற்போர்
முட்டைகளைத் தலைமீது சுமந்த வண்ணம்
முன்னே இவ் விநாயகரை வணங்கி விட்டுப் பாட்டையோடு செல்வார்கள் காலை நேரம்!
பார்ப்பதற்கு வரிசையுடன் அழகாய்த் தோன்றும்! கூட்டமாகப் போகிறவர் பேச்சின் ஓசை
கூச்சலாக மாறுவதும் உண்டு பின்னர், போட்டமுதல் பெருகுமாறு இலாபம் பெற்ருல்
போய்வந்தும், காற்செருப்பைக் கழற்றி நின்று
35