விருந்து
பிழைப்புநாடி அலைகின்ற கவலை யில்லாப்
பிறவிஅவர், பரம்பரையாய்ப் பெரிய சீமான். உழைப்பதற்கும் செல்வத்தைப் பெருக்கு தற்கும்
ஓயாமல் ஆயிரம்பேர் சூழ்ந்துள் ளார்கள். தழைப்பதெல்லாம் புகழுக்கே அவரே என்னைத் தரம்புரிந்து கூப்பிட்டால் தயங்க லாமோ? அழைப்பிதழைப் பார்த்ததுமே அயர்ந்து போனேன்;
அடேயப்பா, அவ்வளவு கேர்த்தி அச்சு!
மிகப்பெரிய மாளிகையின் மூன்ரும் மாடி
வெட்டவெளித் தோற்றத்தில் என்ன மாற்றம்! அகப்படாத பூச்செடியே இல்லை என்பேன்;
அலங்காரத் தொட்டிநிறை செயற்கைத் தோட்டம்! திகைப்பளித்துச் சுடர்வீசும் பலரி றத்தில்
திகழ்கின்ற மின்விளக்கின் தோர ணங்கள்! முகப்பினிலே வரவேற்று வணக்கம் சொல்லி
முறுவலுடன் வழிகாட்ட அடியார் கூட்டம்
எங்கிருந்து வருவதென அறியா வண்ணம்
இனிமைதவழ் நாயனமும் தவிலும் கல்கும் சங்கீத அருவிஅங்கே சலச லக்கச்...
சல்லடமும் சட்டைதலைப் பாகை எல்லாம் சங்குகிற வெண்மையாக அணிந்த ஆட்கள்
தவருமல் ஒவ்வொருவர் அருகில் வந்தும் இங்கிதமாய் என்னென்ன உணவு ക്രേങ്ങഖ
என்பதெலாங் காகிதத்தில் எழுதிச் சென்ருர்,
67