பக்கம்:சுமைதாங்கி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றி

தமிழ்நாட்டில் புத்தகம் படிக்கும் ஆர்வம் மீண்டும் தழைத்துப் பூத்துக் குலுங்குவது கண்டு பெருமகிழ் வடைகின்ருேம். நிறையப் பதிப்பகங்கள் நாள்தோறும் தோன்றுவதும், பலதுறை தழுவிய நூல்கள் ஆங்காங்கு வெளியிடப் பெறுவதும் நல்ல அறிகுறிகளாகும். தாய் மொழி வளர்கிறது என்னும் செய்தியோடு, எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஊக்கம் பெறுகிறர்கள் என்பதும் கவனிக்கத் தக்கதாகும். -

இந்தப் புதுமலர்ச்சி கண்டு பூரிப்பும் துணிவும் கொண்டு, நாங்களும் புதிதாக ஒரு புத்தகத்தை வெளியிட விழைந்தோம். எளிய முறையில் இயற்றப் பெற்றுள்ள கவிதைகள் இன்று பல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன. எனவேதான் இந்தக் கவிதைத் தொகுப்பு தமிழ் மக்களால் வரவேற்கப் பெறும் என்று நம்புகின்ருேம்.

நாங்களும் புதியவர்கள். எங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கல்குங்கள். நாங்கள் தொடர்ந்து இத்துறையில் தொண்டாற்றிட உதவுங்கள். வணக்கம்.

குமணன் பதிப்பகத்தார் சென்னை-90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/8&oldid=692085" இலிருந்து மீள்விக்கப்பட்டது