பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ iனஸே! உன் காதல் தீவில் ஒரு கற்பனைத் தூக்கு மரத்தில் என உருவம தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டவனே! என் உடம்பையும் இதயத்தையும் வெறுப்பில்லாமல் பார்க்க எனக்கு ஆற்றலைக் கொடுஎன்று வேண்டுகிறார் போதலேர். அவர் எழுதியுள்ள கடற்பறவை (Albeatross) என்ற பாடல் அவருடைய அவஸ்தையின் குறியீடாகவும், நச்சுப் பூக்களின் மையக் கருத்தாகவும் அமைந்துள்ளது. ஆல்பட்ராஸ் என்ற கடற்பறவை மிக நீண்ட இறக்கைகளை உடையது. அதை 'வான மண்டலத்தரசன் (The Prince of the clouds) argårp (515 Lilj Gouff. Gustaos; o; அனாயாசமாக அளக்க உதவும் அப்பெரிய சிறகுகளே, பூமியை அடைந்ததும் அதற்குப் பெரிய சுமையாக மாறி விடுகின்றன. அவற்றைத் தூக்கிக் கொண்டு அப்பறவையால் அடியெடுத்து நடக்க முடிவதில்லை. போதலேர் தமது ஆற்றல் மிக்க கற்பனையின் உதவியோடு சொர்க்க மண்டலத்தில் பறந்தாலும், இவ்வுலகப் பற்றும், சிற்றின்ப இச்சையும் தம்மைப் பிணித்து முடக்கி விடுவதாக எண்ணி வருந்து கிறார்; தாம் ஆழ்ந்திருக்கும் துன்பக் கடலிலிருந்து மீட்சியே கிடையாது என்ற வருத்தம் அடிக்கடி அவரிடம் மேலோங்கி நிற்பதுண்டு. பாரிஸ் நகரம் -- . மாறிக் கொண்டிருக்கிறது. என்னை அழுத்தும் துயரச் சுமை சிறுது கூட அசையவில்லை -என்று அவருடைய துயரப் பெருமூச்சு ஒரு பாடலில் கேட்கிறது. மற்றொரு பாடலில், 103