பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வேதாளம் சொன்ன கதைகள் தி.சு. இளஞ்செழியன் (மரத்தடியில் ஒரு இளைஞன்அமர்ந்து கொண்டிருக்கிறான். பயங்கரமான சிரிப்பொலியைத் தொடர்ந்து வேதாளம் ஒன்று மரத்திற்குப் பின்புறமிருந்து வெளிப்படுகிறது. இளைஞன் திரும்பிப்பார்த்துவிட்டு அலட்சிய பாவத்துடன் மீண்டும் எழுதத் தொடங்குகிறான்.) - வேதாளம்:- ஏ! மானிடப்பதரே! உனக்கு அவ்வளவு அலட்சியமா? நான் யார் தெரியுமா? இளைஞன்:- சே கொஞ்சநேரம் நிம்மதியா இருக்கலாமின்னா அதையும் கெடுக்க யாராவது வந்துடறாக இப்ப ஒனக்கு என்ன வேணும் (பையைத் துழாவிவிட்டு இரண்டு பத்துப் பைசா நாணயங்களை எடுத்து வீசுகிறான்) இந்தா இத எடுத்துக்கிட்டு எடத்தைக் காலிபண்ணு! t வேதாளம்:- (காசை எடுத்துப் பார்த்து விட்டு) இது என்ன? எதற்காக இதை என்னிடம் கொடுக்கிறாய்?. இளைஞன்:- எங்கிட்ட இதெவிட்டா வேறே காசு கெடை யாது! திருவிழா வந்துடிச்சின்னா இவுங்கபாடு கொண்டாட்டம் தான்! ஏதாவது ஒரு வேஷம் கட்டிக்கிட்டு இருக்கறவுங்க உயிரை எடுக்கறாங்க காசு குடுத்தாலும் வேணாங்கறே வேறே என்னதான் வேணும்? வேதாளம்:- (பெரிதாகச் சிரிக்கிறது) பிள்ளாய்! என்னை வேஷக்காரன் என்றா எண்ணிக்கொண்டிருக்கிறாய்? நான் யார் தெரியுமா? நான் விக்ரமாதித்தன் காலத்து வேதாளம்: இளைஞன்:- அடச்சீ புளுகறதுக்கும் ஒரு அளவேயில்லா மல்ல போயிடிச்சி! நீ விக்ரமாதித்தன் காலத்து வேதாளம்னா அத நம்ப நான் என்ன முட்டாளா? வேதாளம்னா ஒரு முருங்கமரம் இருக்கும், அதுமேல ஒரு பிணம் தொங்கும், அதை எடுத்துக்கிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/37&oldid=839011" இலிருந்து மீள்விக்கப்பட்டது