பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்ப நான் சொல்றேன், என்னோட பிரச்னைகளை ஒன்னால தீக்க முடியல்லேன்னா ஒன் தலை வெடிக்கனும்! இது மாதிரி அசட்டுத்தனமா யார் கிட்டேயும் கேள்வி கேட்டு மாட்டிக்கத் கூடாது! வேதாளம்:- அய்யய்யோ தெரியாம மாட்டிக் கிட்டேனே, தயவு பண்ணி விட்டுரு. இனிமே ஒன் பக்கமே வரமாட்டேன்! இளைஞன்:- வீணாப்பேச்சை வளக்காதே! பத்துலேருந்து எண்ணப் போறேன். ஒன் முடிவச் சொல்லு இல்லே முடிவுக்குத் தயாரா இரு. எங்கே பத்து. - ஒம்பது.... எட்டு...ஏழு..... ஆறு.... அஞ்சு.... நாலு.... முனு. ரெண்டு. - கடைசியா சொல்லு.... என்பிரச்னைகள்ளே ரெண்டுல ஒண்ணைக் குறைச்சுக்கறேன். ஒண்னுமட்டுமாவது முடியுமா...? வேதாளம்:- கொஞ்சம் மெதுவாத்தான் எண்ணேன் என்னால முடிஞ்சதுன்னா ஏன் இப்பிடிக் கெஞ்சறேன்! இளைஞன்:- முடியாது இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும் (தலை வெடித்து வேதாளம் இறக்கிறது) இருட்டு..... திரை 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/69&oldid=463975" இலிருந்து மீள்விக்கப்பட்டது