பக்கம்:சுயம்வரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

 சுயம்வரம்


இருந்தாலும், கொஞ்சம் சந்தேகம் அவளுக்கு; 'அம்மாவைக் கேட்டுப் பார்ப்போமா?' என்று முதலில் எண்ணினாள்; பிறகு 'ஊஹூம்' என்று தன் தலையைத் தானே ஆட்டிவிட்டு, அப்பாவைக் கேட்டுப் பார்ப்போமா? என்று எண்ணினாள். அதற்கும் என்ன நினைத்தோ என்னவோ 'ஊஹூம்" என்று தலையை ஆட்டிவிட்டு, அத்தானைத்தான் கேட்கவேண்டும்; அதுதான் சரி என்று தனக்குத் தானே தீர்மானித்துக் கொடு, அன்றிரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்தாள்.

பொழுது விடிந்ததும் கேட்கலாமென்றால், அவனை எங்கே தனியாக இருக்க விட்டாள் அந்த அருணா? அவள் தான் விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே வந்து அவனைப் பிடித்துக்கொண்டு விட்டாளே!

அவளைப் பார்த்ததும் 'ஒரு வேளை இவள்தான் மதனாவாயிருப்பாளோ? என்று நீலா நினைத்தாள்; பிறகு, 'அப்படியிருந்தால் அவளை ஏன் இவர் வெளியே நிறுத்தி வைத்துப் பேசப் போகிறார்? உள்ளே அழைத்து வந்து பேச மாட்டாரா?' என்றும் நினைத்தாள். அதற்குப் பின், அது எப்படி முடியும்? அந்த விஷயம் தன் மாமாவுக்கும் மாமிக்கும் தெரியவேண்டாம் என்று இவர் நினைத்திருக்கலாம். அப்படி நினைத்துத்தான் இவர் தன் திருமண அழைப்பிதழைக்கூடத் தன்னுடைய மாமாவுக்கு அனுப்பவில்லையோ, என்னவோ?’ என்று நினைத்த அவள், அவர் எப்போது வெளியே புறப்படுவார்?' என்று காத்திருந்தாள். அந்தச் சந்தர்ப்பம் வாய்த்ததும் அம்மாவிடம் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அவள் அவனுடன் புறப்பட்டு விட்டாள்

போகும்போதே தன்னைக் காட்டிக்கொண்டால் அவர் ஒருவேளை தடுக்கலாம்; அதற்குப் பின் அவரைத் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/109&oldid=1384887" இலிருந்து மீள்விக்கப்பட்டது