பக்கம்:சுயம்வரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சுயம்வரம்



“என்னவோ போங்கள், இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே யில்லை!"

'“பிடிக்காவிட்டால் இன்றைய சமூகத்தில் நீ வாழ முடியாது”'

"ஏன் முடியாது? நமக்காக, நம்மைப்போல் நாம் வாழ வேண்டும் என்று நினைத்தால் நன்றாக வாழலாம்; அந்த வாழ்க்கையில் நிச்சயம் அசலுக்கு இடம் இருக்கும். 'பிறருக்காக, பிறரைப் போல் வாழவேண்டும் என்று நாம் நினைக்கும்போதுதான் அசல் நம்மை விட்டு நழுவி விடுகிறது; போலி வந்து அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விடுகிறது!"

“அடி, சக்கை அசடாயிருந்தாலும் ஆழமான ஒரு கருத்தை அழகாக எடுத்துச் சொல்லி, உனக்கு நான் கட்டிய அசட்டுப் பட்டத்தை எனக்கு நீ கட்டிவிட்டாயே? பலே! என்று தன்னை மறந்து அவள் முதுகில் ஒரு ஷொட்டுக் கொடுத்தான் அவன். ” “நாலு பேருக்கு நடுவே இதெல்லாம் என்ன, அத்தான்? எனக்கு வெட்கமாயிருக்கிறது' என்றாள் அவள். ”

“வெட்கமாவது இதற்கெல்லாம் வெட்கப்பட்டால் நாளைக்கு நீ அந்த 'டிஷ்யூ சாரியைக் கட்டிக்கொண்டு நாலு பேருக்கு முன்னால் உலா வருவது எப்படி?”

'எந்த டிஷ்யூ சாரியை?’’ "அதோ பார், அந்த நார்மணி கட்டிக்கொண்டு வருகிறாளே, அந்த 'டிஷ்யூ சாரியைத்தான் சொல்கிறேன். அது அவள் உடம்பின்மேல் இருப்பது போலவே தெரிய வில்லையல்லவா?" என்று சற்றுத் துரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை அவளுக்குச் சுட்டிக் காட்டினான் அவன்.

“ஐயே கண்ணராவிக் காட்சியாகவல்லவா இருக்கிறது அது?" என்று முகத்தைச் சுளித்தாள் அவள். ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/115&oldid=1384847" இலிருந்து மீள்விக்கப்பட்டது