விந்தன்
17
நின்றுகொண்டு விடுகிறேன்!” என்றான் அவன், அவளுக்குத் தன் முதுகைக் காட்டி நின்று.
அவள் தன் ‘மினி முன்றானை’யை எடுத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “என்ன ஆனாலும் சரி, அவரை நான் காதலிக்காமல் விடுவதில்லை என்று சபதம் ஏற்றிருக்கிறேன்!” என்றாள் உறுதி வாய்ந்த குரலில்.
“இனிமேல் என்ன ஆகப்போகிறது? அடுத்த வருஷம் இந்த நாளில் அவர்கள் கையில் ஒரு ‘குவா, குவா’ இருக்கப் போகிறது!”
“அதற்குத்தான் இடம் கொடுக்கக்கூடாது என்கிறேன் நான்”
“அது எப்படி முடியும்? இடம் கொடுக்காமல் இருக்க வேண்டியவள் மதனா அல்லவா?”
“அவளைத்தான் இடம் கொடுக்க விடக்கூடாது என்கிறேன் நான்!”
“ஓ! அதற்காகத்தான் காலையில் நடந்த கலியாணத்தின் போது கூட, நீங்கள் அவளுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு லூப்பை அன்பளிப்பாகக் கொடுத்தீர்களா? அதை ஏதோ வேடிக்கைக்காகக் கொடுத்தீர்களாக்கும் என்றல்லவா நான் நினைத்தேன்?”
“இல்லை; அதில் என் வேதனையும் கலந்திருக்கிறது!”
“வேதனைக்கு அதில் என்ன இருக்கிறது? கற்பை ஆதரிக்கிறார்களோ இல்லையோ, கர்ப்பத் தடையைத்தான் இந்தக் காலத்தில் எல்லாரும் ஆதரிக்கிறார்களே!”
“இருந்தாலும் அந்த ‘லூப்’புடன் அவர்களை விட்டு விடுவதாக இல்லை நான்!”
“விடாமல்...?”
க - 2