பக்கம்:சுயம்வரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதலிலும் ‘ஒருமைப்பாடு’
கண்டால் என்னவாம்?...

3


ண்ணே,

‘தோல் இருக்கச் சுளை விழுங்கிகள்’ சிலர் இந்த உலகத்தில் உண்டு. அவர்கள் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்று ‘மாய்மாலம்’ செய்து, தங்களுடைய அயோக்கியத் தனங்கள் அத்தனையையும் ‘70 எம்.எம். திரை’ போட்டு அப்படியே மறைத்துவிடுவார்கள். ஆத்மாவையே கொன்று விட்டு வாழும் அந்தப் பாவிகளுக்குள்ள துணிவு எனக்கு இல்லை. அதனாலேயே ஆனானப்பட்ட அப்பாவையும் அம்மாவையும் எதிர்த்து நின்ற நான், அற்ப மாமாவுக்கு அஞ்சி வெளியே நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்; நீ உள்ளே சிறைப்பட்டிருக்கின்றாய்!

இதற்கு முன் புரியாத ஒர் உண்மை இப்போது உனக்குப் புரிந்திருக்கும். ‘காதல் எந்த நிலையிலும் இன்ப மயமானது. கை கூடினாலும் அதில் இன்பம் உண்டு; கை கூடாவிட்டாலும் அதில் இன்பம் உண்டு. கை கூடினால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து இன்பம் காணலாம்; கூடாவிட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து, அதன் நினைவுகளிலேயே இன்பம் கண்டு மகிழலாம்’ என்பாயே நீ, அதன்படி இப்போது இன்பம் காண முடிகிறதா, உன்னால்? உன்னைக் கேட்கிறேனே, என்னால்தான் காண முடிகிறதா? இல்லை. துன்பம், துன்பம், துன்பம் - அதைத் தவிர வேறொன்றையும் நான் இப்போது காணேன்

கண்ணின் மணியே!

‘வெயிலில் அலைந்தவனுக்கு விடா தீர்க்க நீர் தேவை; ஒடிக் களைத்தவனுக்கு உட்கார நிழல் தேவை. அதே மாதிரி காதலுக்கும் கலியாணம் தேவை’ என்று நாம் நேற்று வரை எண்ணியிருந்தோம். இன்று?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/24&oldid=1384925" இலிருந்து மீள்விக்கப்பட்டது