பக்கம்:சுயம்வரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சுயம்வரம்

“அப்படி என்ன பாவம் செய்துவிட்டீர்கள், நீங்கள்?” என்றாள் அவள், ஒன்றும் புரியாமல்.

“என் அப்பாவுக்குப் பிள்ளையாய்ப் பிறந்தது நான் செய்த முதல் பாவம்; உங்களுக்கு உறவு முறையில் மாப்பிள்ளையாக இருப்பது நான் செய்த இரண்டாவது பாவம்” என்று சொல்ல நினைத்த அவன், போனாற் போகிறதென்று அப்படிச் சொல்லாமல், “ஒன்றுமில்லை, தூக்கத்தில் ஏதோ உளறினேன்!” என்று சொல்லிக்கொண்டே, முகம் கழுவச் சென்றான்.

“அந்த விஷயத்தில் உங்கள் மாமாவுக்கு நீங்கள் தோற்றவர் இல்லைபோல் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே அவள் அவனுக்காக அவசரம் அவசரமாகக் காபி போடச் சென்றாள்.

“என் தலையையும் சேர்த்து ஏண்டி, உருட்டறே?” என்று சொல்லிக்கொண்டே திண்ணையைத் தேடி வெளியே சென்ற மாமா, அங்கே திண்ணையைக் காணாமல் ‘திண்ணை இல்லாத வீடு என்ன வீடு?’ என்று தமக்குள் பொருமிக் கொண்டே நின்றார்.

‘பலிக்காது; பகற் கனவு பலிக்காது!’ என்று தன்னைத் தானே தைரியப்படுத்திக்கொண்டு, குளிக்கும் அறைக்குள் நுழைந்தான் மாதவன்.

‘முன்னெல்லாம் ஒரு பெண் கலியாணத்துக்குத் தயாராகி விட்டால் எவனாவது ஒருவன் வீடு தேடி வந்து பார்க்கும்வரை அவளைப் பெற்றவர்கள் வீட்டோடு வைத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது என்னடாவென்றால் அவர்களே எவனாவது ஒருவன் வீட்டைத் தேடி அவனை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்களே?’ என்ற ஆற்றாமையுடன் அவன் தன் முகத்தைக் கழுவிக்கொண்டு திரும்பியபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/43&oldid=1385092" இலிருந்து மீள்விக்கப்பட்டது