பக்கம்:சுயம்வரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சுயம்வரம்

 கோப்பிலே பார், இப்படி ஒரு துண்டை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கக்கூட அதிலே வர்றவ என்ன துள்ளுத்துள்ளறா, என்ன பாட்டுப் பாடறா, எப்படி எப்படியெல்லாம் இளிக்கிறா!' என்று மாமியும் அதே மாதிரி ஆடிக் காட்ட, "வேண்டாம் மாமி, சினிமாக்காரன் பார்த்தா உங்களை வேன்'லே தூக்கிப் போட்டுக் கொண்டு போய் விடுவான்' என்று கண்ணை மூடிக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான் மாதவன்.

அதற்குமேல் அவனுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாமலோ என்னவோ, தன் மகளிடம் இருந்த துண்டை வாங்கித் தானே மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, “இங்கே வாடி' என்று அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள் மாமி.

அடுத்த முற்றுகை எதுவாயிருக்குமோ? அந்த முற்றுகையின்போது நிராயுதபாணியான தன்னைத் தாக்குவதற்கு இவர்கள் எந்தெந்த ஆயுதங்களையெல்லாம் பயன்படுத்துவார்களோ? அது ஒருவேளை பலகாரம், காபியாக இருந்தால், அவற்றை எப்படிச் சமாளிப்பது? காலையில் இவர்கள் கொடுத்த காபியையும், அதற்குப் பின் இவர்கள் போட்ட சாப்பாட்டையும் சமாளிப்பதற்குள்ளேயே தன் பாடு போதும், போதும் என்றாகிவிட்டதே, என்ன செய்யலாம்? எப்படி இவர்களிடமிருந்து தப்பலாம்? சொல்லிக் கொள்ளாமல் ஓடி விடலாம் என்றாலும் வெளியே மாமா நிற்கிறார் பாழும் வீட்டுக்குப் புழக்கடை வழி என்று ஒரு வழியாவது இருக்கிறதா?அதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அங்கே போய் மாமி நிற்பாளோ, என்னவோ? கடவுளே இந்தத் திட்டமிட்ட சதி”யிலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா? ஏதாவது ஒரு நல்ல ஒட்டலில் நல்ல 'டி.பன் சாப்பிட்டுவிட்டுப் போய் என் ஆசை மதனாவைப் பார்க்க எனக்கு நீ அருள் புரிய மாட்டாயா?" என்று பலவாறாக எண்ணி அவன் பயந்துகொண்டிருந்தபோது, பலகாரத் தட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/45&oldid=1384929" இலிருந்து மீள்விக்கப்பட்டது