இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68
சுயம்வரம்
"நான்... நான்..."
"போங்கள் சார், நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள்!"
"நான்... உங்களை..."
"நான்... உங்களை..."
"போங்கள் சார், என்னை நீங்கள் நையாண்டி செய்கிறீர்கள்; நான் சொல்ல மாட்டேன்!"
"இல்லை , சொல்லு?"
"உடல் இன்பத்துக்காக உங்களை நான் 'கா' பண்ணவில்லை சார், உயிர் இன்பத்துக்காக 'கா' பண்ணுகிறேன்."
"காவா! அது என்ன கா?"
"அதுதான் சார், கா... கா..."
"காக்காயா?"
"உக்கும், குருவி! போங்கள் சார், அதுகூடத் தெரியாதாக்கும் உங்களுக்கு?" என்றாள் அவள் சற்றே சிணுங்கி.
"தெரியவில்லையே!" என்றான் அவன், ஒரு கைக்கு இரு கைகளாக விரித்து.
"இரண்டாவது எழுத்தையும் சேர்த்து வேண்டுமானால் சொல்லட்டுமா?"
"சொல்லு?"
"கா.. த...கா...த..."
"ஓ, காதா?" என்று அவன் தன் காதைப் பிடித்துக் காட்ட, "ஆமாம், குத்தியிருந்தால் கடுக்கன் போட்டுக்