பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஓர் ஒப்பாய்வு 11 பன்மு கங்கொண்டவர்; பட்டைத் தீட்டப் பெற்ற வைரம் போன்றவர். பல நிறத் தோற்றம் தரும் பண்புடையவர். இவர் போன்றார் எவரும் இல்லை எனக் கூறிவிடலாம். எல்லாரும் எப்போதும் எப்படியும் சுவைக்கத்தக்க ஒரு மாமனிதர் சுரதா தவிர்க்க முடியாத சிந்தனையாளர். தகர்க்க முடியாத கருத்தாளர். பார்த்தோர், பழகியோர், படித்தோர் மறக்க முடியாத கவிஞர் இவர்! ‘என்னைப் பின்பற்றிப் பாடுதற்கோர் கூட்டமுண்டு’ என்று தெரிந்து பாடிய உண்மைக் கவிஞர். நெஞ்சிருக்கும் வரை இவர் நினைவிருக்கும். இவர் ஆத்திகம் மறுத்த நாத்திகக் கவிஞர் இவரது நாத் திறமும் பாத் திறமும் நாடறியும். நாளைய எதிர்காலமும் இவரைக் கைவிட முடியாது. கவிதை ஆர்வலர் படித்தறிய வேண்டிய நால் இது. கவிஞர்களுக்கும் வழிகாட்டும். மகிழ்வுடன் படைக்கிறோம். உவமைக் கவிஞரின் புகழ் வாழ்க! வளர்க! அன்பன் வெள்ளையாம்பட்டு கந்தரம்