பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கவிஞர் முருகு சுந்தரம் அலேக் நிர்மலா அழகுமுயல் வளர்க்கிறார்! காளி தாசனின் காவிய நாயகி மங்கை சகுந்தலை மான்வளர்த் தானாம்! வரதுங்க ராம பாண்டியன் மனைவி மரகதப் பச்சை மயில்வளர்த் தாளாம்! காலஞ் சென்ற நடிகைகண் ணாம்பா நாக்கு நீண்ட நாயொன்று வளர்த்ததை ஏடும் செந்தமிழ் நாடும் அறியும்! கச்சிதமான கட்டுடல் அமைந்த அச்சார நடிகை "அலேக் திர்மலா மூன்றெழுத் துடைய முயல்வளர்க்கின்றார். நீண்ட செவிகளும் நெல்லிக்காய் விழிகளும் வெடித்த பருத்திபோல் வெள்ளை நிறமும் கொண்ட சிறுமுயல் குதித்துக் குதித்து விளையாடும் காட்சியை வேடிக்கை பார்ப்பதே பூச்சர நடிகையின் பொழுது போக்காம். விநோத நடிகையின் வீட்டிலே வளரும் சலவை முயலுக்குத் தழைகளே சாதமாம்! அத்தி நிலாவெனும் அந்த நடிகையின் மெல்லிய மடியே முயலுக்கு மெத்தையாம்! சேரிடம் அறிந்து சேர்ந்தபின்,அம்முயல் வேறிடம் செல்ல விரும்புமோ தோழரே! "