பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഴ്ച சுரதா ஒர் ஒப்பாய்வு 151 நெய்த செய்திகள் சுரதா பட்டு நெய்யும் நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பழக்கமான குலத்தொழில் பாவலரை விட்டுப் போகுமா? இங்கே செய்திகளையும் பட்டுப்போல் நெசவு செய்கிறார். சின்ன சின்ன வண்ண மத்தாப்புகள்! கன்னியும் தென்னையும் பத்து வயதோ பாவாடைப் பருவம் பதினைந்து வயதோ பூவாடைப் பருவம். பூத்து மலர்ந்த பொன்னி என்பவள் பத்தும் ஐந்தும் தொத்திய வயதினன். அந்த மங்கையோ அழகுச் சண்பகம் அத்தி நிலவுக் கறிமுகம் அவள்முகம்: சிறிது கற்றவன்; செந்திறம் பெற்றவள். அன்னவள் ஒருநாள் அத்தி மாலையில் வீட்டை விட்டு வெளிப்புறம் வருகையில் கூந்தல் ஏந்திய குளிரினத் தென்னையின் தனிக்காய் ஒன்றவள் தலையில் விழுந்தது. தலையில் வீழ்ந்ததால் தரையிற் சாய்ந்தனள் மிதக்கும் மேகமும் மின்னலும் சேர்ந்து