பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ぬ ł68 கவிஞர் முருகு சுந்தரம் છે விட்டார். அவரே ஓயட்டும் என்று பேசாமல் இருந்தேன். கார் விடுதியை அடைந்தது. காஃபியும் பொடியும் கேட்டார்; தருவித்துக் கொடுத்தேன். எழுதுகோலையும், தாளையும் கையில் கொடுத்துத் தலைமைக் கவிதை எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு, அவருடைய அறையை வெளியில் பூட்டிவிட்டேன், மற்றவர்கள் உள்ளே சென்று அவர் வேலையைக் கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக. கவியரங்கம் பிற்பகல் 4 மணிக்குத் தொடக்கம். 3 மணிக்கு அறைக் கதவைத் திறந்துவிட்டேன். 'இதோ ஆச்சு கடைசிப் பாட்டு எழுதிக்கிட்டிருக் கிறேன். சே கவிதை எவன் எழுதுவான்! விறகு பொளக்கற மாதிரி அலுப்பா இருக்குது' என்னும் முணகிக்கொண்டே எழுதினார். சரியாக 4 மணிக்கு நானும் சுரதாவும் கவியரங்க மேடையில் ஏறினோம். 'அப்பா இப்பத்தான் எனக்கு உசிரே வந்தது' என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டார் கவிஞர் கருணானந்தம். அன்று சுரதா பாடியவற்றுள் 'கொசுக் கடித்து யானை யொன்றும் சாவதில்லை என்னும் உவமை என் உள்ளத்தில் உடனே அப்பிக்கொண்டது. கவியரங்கம் மாலை 6 மணிக்கு முடிவுற்றது. நானும் சுரதாவும் வேறு பல நண்பர்களும் வைத்தீஸ் வரன் கோயிலுக்குக் காரில் திரும்பிக் கொண்டி ருந்தோம். அந்தியிருள் கவியத் தொடங்கியிருந்தது.