பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கவிஞர் முருகு சுந்தரம் ഴി கேள்வி: நீங்கள் பிறந்த ஊர் எது? பதில்: தஞ்சை மாவட்டத் திருநாகேசுரம், ஞானியார் அடிகள் பிறந்தஊர். கேள்வி: கவிதை விருப்பம் இளமையில் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? பதில்: ஒப்பாரி, வள்ளுவன் கூறும் ஜோதிடப் பாடல், குறிசொல்லும் குறத்திப்பாடல், ஏணி ஏற்றம் ஆகியவற்றைச் சிறுவயதில் விரும்பிக் கேட்கும் பழக்கம் உண்டு. பள்ளியில் படிக்கும்போதே பாட்டெழுதுவ்ேன். நான் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலை, எம் பள்ளி மாணவர்கள் பாடுவார்கள். அப்போது எனக்கு வயது பதினான்கு. கேள்வி: நீங்கள் இளமையில் யாரிடமாவது பாடம் கேட்டதுண்டா? பதில்: ஒரத்தநாடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, நந்திக் கலம்பக உரையாசிரியர் அருணாசல தேசிகரிடம் கொஞ்சநாள் இலக்கண இலக்கியப்பாடம்கேட்டதுண்டு. பேராசிரியர்இலக்குவ னாரும் அப்போது அப்பள்ளியில் மாணவராக இருந்தார்; பத்தாம் வகுப்புவரை படித்தேன். கேள்வி: இளமையில் உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் யார் யார்?