பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రో சுரதா ஓர் ஒப்பாய்வு 25 பதில்: நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சுத்தானந்த பாரதியின் பாடல்கள் அடிக்கடி பத்திரிகைகளில் வரும். முதலில் அவரைப் பின்பற்றி எழுதினேன். பழையனூரில் டீக்கடை வைத்திருந்த அழகப்பன் என்பவர் பாரதிதாசன் கவிதைகளை எனக்கு அறிமுகப் படுத்தினார். அவர் பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். ஒருநாள் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியை எனக்கு அவர் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அன்றிலிருந்து என் உள்ளத்தில் இடம் பிடித்திருந்த சுத்தானந்த பாரதி அவுட்." கேள்வி: பாவேந்தர் தொடர்பு எப்போது ஏற்பட்டது? பதில்: 1941 ஜனவரி 14ஆம்நாள். அன்று தைப்பொங்கல். கேள்வி: பத்திரிகையில் நீங்கள் கவிஞராக அறிமுகமானது எப்போது? பதில்: என்னை முதன் முதலில் கவிஞராக அறிமுகப் படுத்தியவர் கவிஞர் திருலோக சீதாராம். தாம் நடத்தி வந்த 'சிவாஜி யில் என் கவிதைகளைத் தொடர்ந்து பத்து வாரங்கள் வெளியிட்டு என்னை விளம்பரப்படுத்தினார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த தலைவன் பத்திரிகையில் கொஞ்சநாள் துணையாசிரியராகப் பணியாற்றினேன்.